Sunday, May 27, 2012

இலங்கைத் தமிழரசுக்கட்சியின் 14ஆவது தேசிய மாநாடு கோலாகலமாக ஆரம்பமானது.
இலங்கைத் தமிழரசுக்கட்சியின் 14ஆவது தேசிய மாநாடு மட்டக்களப்பில்  ஞாயிற்றுக்கிழமை காலை 9.30 மணிக்கு மேளவாத்தியம் முழங்க கோலாகலமாக ஆரம்பமானது.
கட்சியின் தலைவர் நாடாளுமன்ற உறுப்பினர் இரா. சம்பந்தன் பொதுச்செயலாளர் நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா உள்ளிட்ட அதிதிகள் அழைத்து வரப்பட்டனர்.
அதனையடுத்து மாநாட்டின் ஆரம்பிப்பையொட்டி சம்பந்தன் கட்சிக் கொடியினை ஏற்றிவைத்து அரம்பித்து வைத்தார்.
அதனையடுத்து சிவஸ்ரீ சாம்பசிவக் குருக்கள் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் கீதத்தினை இசைத்தார்.
இதனைத் தொடர்ந்து இதுவரை காலமும் போராட்டங்கள் மற்றும் இயற்கை அனர்த்தங்களில் உயிர்நீத்த தமிழ் உறவுகளுக்காக இரண்டு நிமிட மௌன அஞ்சலி மங்கல விளக்கேற்றலையடுத்து தந்தை செல்வாவின் படத்திற்கு நாடாளுமன்ற உறுப்பினரும் கட்சியின் சிரேஸ்ட உபதலைவருமான பொன் செல்வராசா மாலை அணிவித்தார்.
அதனையடுத்து மட்டக்களப்பு அம்பாறை மாவட்டத்தில் தமிழரசுக் கட்சியில் இருந்து மரணமடைந்த பாராளுமன்ற உறுப்பினர்கள். கட்சிப் பிரமுகர்கள் தமிழரசுக் கட்சித் தலைவர்களுக்கு மலரஞ்சலி செலுத்தப்பட்டது.
கலாசார நடனத்தைத் தொடர்ந்து மதத்தலைவர்களின் ஆசிகளுடன் மாநாடு தற்போது நடைபெற்று வருகிறது........

(thanks TW)

No comments:

Post a Comment