Showing posts with label நீதானே என் பொன் வசந்தம். Show all posts
Showing posts with label நீதானே என் பொன் வசந்தம். Show all posts

Sunday, May 27, 2012

நீதானே என் பொன் வசந்தம்
ஜீவாவால் ஒரு குடுமிப்பிடி

யாரோ வெட்டிப்போட்ட முள்ளு யாரு காலிலேயோ ஏறுன மாதிரி ஆகிடும் போலிருக்கு ஜீவா-கவுதம் மேனனுக்கு வந்திருக்கும் Neethane En Ponvasanthamபுது சிக்கல். பிரபல தயாரிப்பாளர் ஆர்.பி.சவுத்ரி பல வருடங்களுக்கு பிறகு தயாரித்த படம்தான் ரவுத்திரம். இப்படத்தின் ரிசல்ட் அநேகமாக வாசகர்கள் அறிந்ததுதான். அப்போதே இப்படத்தின் நஷ்ட ஈடு கேட்டு நச்சரிக்க ஆரம்பித்தார்கள் விநியோகஸ்தர்கள். இப்படத்தால் சுமார் 68 லட்சம் நஷ்டம் என்பது இவர்கள் தரப்பு வாதம்.
விநியோக சட்ட திட்டங்களுக்கு உட்பட்டு படத்தை வாங்கும் இவர்கள் படம் ஓடாவிட்டால் எந்த முறையில் படத்தை வாங்கினோம் என்பதையெல்லாம் பார்க்காமல் தயாரிப்பாளரை குடைவது வாடிக்கையாகிவிட்டது. சவுத்ரியையும் இவர்கள் விடவில்லை. தொடர்ந்து நச்சரித்துக் கொண்டேயிருந்தார்கள்.
எம்.ஜி.என்ற முறையில்தான் படத்தை வாங்கியிருக்கிறீர்கள். ஓடாவிட்டால் பணத்தை திருப்பி தர வேண்டியது இல்லை என்று அவர் பதிலளித்த போதும் விடாமல் தொல்லை தந்த விநியோகஸ்தர்கள் இப்போது ஜீவாவின் 'நீதானே என் பொன் வசந்தம்' படத்தை ரிலீஸ் செய்ய விடாமல் முடக்க நினைக்கிறார்களாம்.
இரு படங்களுக்கும் வேறு வேறு தயாரிப்பாளர்கள் என்பதால் ஒரு குடுமிப்பிடிக்கு தயாராகிக் கொண்டிருக்கிறது கோடம்பாக்கம்.