Sunday, May 27, 2012

இலங்கையின் சனத்தொகை 20.2 மில்லியன்கள்
                                                               [ ஞாயிற்றுக்கிழமை, 27 மே]
 நாடளாவிய ரீதியில் 30 வருடங்களுக்கு பின்னர் மேற்கொள்ளப்பட்ட சனத்தொகை கணக்கெடுப்பின்படி இலங்கையின் சனத்தொகை 20.2 மில்லியன் என்று தெரியவந்துள்ளது.
இந்த தரவினை உத்தியோகபூர்வ தகவல்கள் உறுதிப்படுத்தியுள்ளன
இதன்படி 14.9 மில்லியன் மக்கள் சிங்களவர்கள் என்று தெரியவந்துள்ளது.
வருடந்தோறும் சனத்தொகையில் 220 ஆயிரம் பேர் அதிகரித்து வருகின்றனர்.
இந்தநிலையில் 2041 ஆம் ஆண்டில் இலங்கையில்  மொத்த சன்த்தொகை 24 மில்லியன்களாக இருக்கும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.
வடக்கின் ஐந்து மாவட்டங்களிலும் தற்போதைய சனத்தொகை 997,754 பேராகும் இதில் 934,392 பேர் தமிழர்களாவர். 21,860 பேர் சிங்களவர்கள். 32,659 பேர் முஸ்லிம்களாவர்.
இந்தக்கணக்கெடுப்பின்படி முஸ்லிம்களின் சன்தொகையின் மூன்றில் ஒரு பங்கினர் வடக்கு கிழக்கிலேயே வசிக்கின்றனர். இதில் கிழக்கிலேயே அதிக முஸ்லிம்கள் வசிக்கின்றனர்.
இந்தநிலையில் கிழக்கில் தமிழ் சிங்கள மற்றும் முஸ்லிம்களின்  சனத்தொகை சமமாகவே உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன
இதேவேளை இந்த சனததொகை கணக்கெடுப்பு அறிக்கை இறுதிப்படுத்தப்பட்டு அது ஜனாதிபதியிடம் கையளிக்கப்படவுள்ளதாக இலங்கை புள்ளிவிபரத்திணைக்களம் தெரிவித்துள்ளது
இதன்பின்னர், அது மூன்று பிரிவுகளாக வெளியிடப்படவுள்ளன

No comments:

Post a Comment