Monday, March 4, 2013
இலங்கை அணி வீரர்கள் அனைவரும் ஒப்பந்தத்தில் கைச்சாத்து
இலங்கை கிரிக்கெட் அணி வீரர்கள் 23 பேரும் இன்று அடுத்த ஆண்டிற்கான புதிய ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டுள்ளதாக இலங்கை கிரிக்கெட் சபை தெரிவித்துள்ளது.
கிரிக்கெட் சபையில் இலங்கை கிரிக்கெட் தெரிவுக் குழுவின் தலைவர் சனத் ஜெயசூரியாவுக்கும் வீரர்களுக்குமிடையில் இடம்பெற்ற பேச்சுவார்த்தையின் அடிப்படையில் சுமுகமான தீர்வு எட்டப்பட்டு நான்கு பிரிவுகளாக பிரிக்கப்பட்டு அவர்கள் தங்களது பிரிவுகளின் கீழ் ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டுள்ளனர்.
மஹேல ஜயவர்தன வெளிநாட்டில் உள்ள போதும் இவ் ஒப்பந்தத்தில் அவரும் கைச்சாத்திட முடிவுசெய்துள்ளதாக தெரிவிக்க படுகிறது.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment