Monday, March 4, 2013

"ஒன்பதுல குரு" படத்தின் இரண்டாம் பாகம் ரெடி

கொலிவுட்டில் பி.டி.செல்வகுமார் இயக்கத்தில் வினய் லட்சுமிராய், சத்யன், அரவிந்த் ஆகாஷ் நடித்த ஒன்பதுல குரு எதிர்வரும் 8ம் திகதி வெளிவர இருக்கிறது. ஒரே காலனியில் வசிக்கும் நான்கு நண்பர்கள், ஒருவரைவிட இன்னொருவர் பணக்காரராக வேண்டும் என்று போட்டி போடுவார்கள். ஆனால் உண்மையில் உழைக்காமல் ஒருவரை கவிழ்த்து இன்னொருவர் முன்னேற நினைக்கின்றனர். இவர்களுக்கு இடையில் ஒரு பெண் நுழைய நண்பர்களின் லட்சியம் மாறிவிடும். இப்படி கொமடியாக கதை சொல்லும் படம். இதன் இரண்டாம் பாகம் தயாராக இருக்கிறது என்று இயக்குனர் பி.டி.செல்வகுமார் அறிவித்திருக்கிறார். நான்கு நண்பர்களில் ஒருவர் அந்த பெண்ணை திருமணம் செய்து கொள்கிறார். இதனால் பொறாமைப்படும் மற்ற நண்பர்கள். அவர்களை சந்தோஷமாக வாழ விடாமல் பிரிக்க முயற்சிப்பதும், அதை அவர்கள் சமாளிப்பதும் இரண்டாம் பாகத்தின் கதையாம். முதல் பாகத்தில் நடித்த அனைவரும் இரண்டாம் பாகத்தில் நடிக்கிறார்களாம். முதல் பாகத்தில் கொமடியனாக நடித்த சத்யன் இரண்டாம் பாகத்தில் வில்லனாம். ஒரு பாட்டுக்கு ஆடிய பவர் ஸ்டார் இரண்டாம் பாகத்தில் புதுமண தம்பதிகளின் ஆலோசகராக நடிக்கிறாராம். நண்பர்கள் போடும் திட்டத்தை முறியடித்து தம்பதிகளை காப்பது பவரின் வேலை என்று இயக்குனர் கூறுகிறார்.

No comments:

Post a Comment